வாடிக்கையாளர் போல சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து, பொருட்களை திருடிய இளம்பெண்.. கடை ஊழியர் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள்.!

0 3483

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, வாடிக்கையாளர் போல சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து, பொருட்களை திருடிக் கொண்டு தப்பியோடிய இளம்பெண்ணை, கடை ஊழியர் துரத்திச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

உமையாள் தெருவில் உள்ள அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு நேற்றிரவு 7 மணிக்கு சென்ற சுடிதார் அணிந்திருந்த இளம்பெண், பொருட்கள் வாங்குவது போல கடையில் அங்கும் இங்குமாக நோட்டமிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

பின்னர், துப்பாட்டாவால் முகத்தை மூடிக் கொண்ட அந்த இளம்பெண், உணவு பொருட்களை திருடி வயிற்றுப் பகுதியில் மறைத்து வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இதனை சிசிடிவி மானிட்டர் வாயிலாக கவனித்துக் கொண்டிருந்த கடை ஊழியர், அந்த இளம்பெண்ணிடம் சென்று கேட்ட போது அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். விடாமல் ஊழியரும் பின்னாலேயே துரத்திச் சென்று அவரை பிடித்த நிலையில், பொருட்களை மீட்டுக் கொண்டு அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments