கேஜிஎஃப் 2 படத்தில் நடித்த நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்..

0 3128
கன்னட நடிகரும், கேஜிஎஃப் படங்களில் நடித்தவருமான மோகன் ஜுனேஜா உடல் நலக்குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கன்னட நடிகரும், கேஜிஎஃப் படங்களில் நடித்தவருமான மோகன் ஜுனேஜா உடல் நலக்குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கேங்க கூட்டிக்கிட்டு வர்ரவன் கேங்ஸ்டர், ஒத்தையா வர்ரவன் மான்ஸ்டர் என கேஜிஎஃப் 2 படத்தில் அவர் பேசிய வசனம் மிகவும் பிரபலமானது.

பல மொழிப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள அவர், அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தாமேனஹள்ளி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது மறைவையொட்டி கன்னட திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments