வர்ஜீனியா மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை...குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.!

0 1345

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணாத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.

மேற்கு வர்ஜீனியாவில் உள்ள ஸ்பென்சர் நகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

சில இடங்களில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

புயல் காரணமாக மழை தொடர வாய்ப்பிருப்பதால் வர்ஜீனியா மாகாணத்திற்கு தேசிய வானிலை மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தயாராக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments