பாதையை அடைத்ததால் படாத பாடு...5 நாட்களாக வீட்டிற்குள் சிக்கி தவிக்கும் குடும்பம்.!

0 20999

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாதையை அடைத்ததால் அப்பகுதியில் உள்ள  வீட்டில் வசிப்போர் கடந்த 5  நாட்களாக வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

குண்டகவயல் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டில் மனைவி விஜி , இரு குழந்தைகள் மற்றும் அவரது தாய் வசித்து வருகின்றனர்.

இந்த வீட்டில் இருந்து மெயின்ரோட்டிற்கு செல்லும்  பொதுப்பாதையினை அப்பகுதியில் இருந்தவர்கள் கொட்டகை போட்டு அடைத்து விட்டனர்.

பின்னர் வருவாய்துறை ஏற்பாடு செய்து கொடுத்த மாற்று பாதையை அவர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அந்த பாதையையும் கடந்த 5 நாட்களுக்கு முன் அடைத்து விட்டனர்.

இதனால் அந்த வீட்டில் வசிக்கும் 4 பேரும் கடந்த 5 நாட்களாக வெளியே வர முடியாமல் தவித்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து தாங்கள் வெளியேற பாதை ஏற்படுத்தி தரவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments