சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் 2 போலீசார் கைது..!

0 3421

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக 2 போலீசாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைமைச் செயலக காலனி காவல்நிலைய போலீசாரின் விசாரணைக்கு சென்ற விக்னேஷ், கடந்த 19ஆம் தேதி மரணமடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிபிசிஐடி அனுப்பிய சம்மன் அடிப்படையில் வழக்கில் தொடர்புடைய போலீசார் 9 பேர் நேற்று காலையில் விசாரணைக்கு ஆஜராகினர்.

விசாரணையின்போது, பெண் காவலர் ஆனந்தி, விக்னேஷ் தாக்கப்பட்டது குறித்தும், மருத்துவமனைக்கு அவர் எந்த நிலையில் கொண்டு செல்லப்பட்டார் என்பது குறித்தும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக தலைமை செயலக காலனி காவல் நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ்  ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments