நெல்லையில் பழக்கடையில் ரசாயனக்கற்களை கொண்டு பழுக்கவைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்.!

0 9288

நெல்லையில் பழக்கடை ஒன்றில் ரசாயனக்கற்களை கொண்டு பழுக்கவைக்கப்பட்ட 500 கிலோ அளவிலான மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

நெல்லை சந்திப்பில் கண்ணம்மன் கோவில் தெருவில் உள்ள பழக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மொத்த விற்பனை பழக்கடை ஒன்றில் 500 கிலோ மாம்பழங்கள் ரசாயனக்கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்து அழித்த அதிகாரிகள் இது போன்று பழக்கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments