அரசு நிலம் தனியாருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட வழக்கு ; துணை வட்டாட்சியர் உட்பட 3 பேர் கைது

0 1604
அரசு நிலம் தனியாருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட வழக்கு ; துணை வட்டாட்சியர் உட்பட 3 பேர் கைது

தேனியில், அரசுக்கு சொந்தமான இடம் தனியாருக்கு சட்ட விரோதமாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட வழக்கில், துணை வட்டாட்சியர் உட்பட 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான சுமார் 182 ஏக்கர் நிலம் அரசு அதிகாரிகளின் உதவியுடன் கடந்த ஆண்டு தனியாருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, அப்போது பணியில் இருந்த 2 வருவாய் கோட்டாட்சியர்கள் உட்பட 14 பேர் மீது வழக்குபதியப்பட்டு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெரியகுளம் மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராம், நில அளவையாளார் சக்திவேல், மற்றும் உதவியாளர் செல்வராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments