நாகர்கோவிலில் இடப் பிரச்சனை தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரது மண்டை உடைப்பு.!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடப் பிரச்சனை தொடர்பாக இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரது மண்டை உடைந்த நிலையில், மோதல் தொடர்பான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இரணியல் தின்னவிளையைச் சேர்ந்த மாலதி சேகர் என்பவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான அரை செண்ட் நிலத்தை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த மனோஜ் என்பவர் ஆக்கிரமித்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இருதரப்பினரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட நிலையில், மாலதி தரப்பில் ஒருவரது மண்டை உடைந்தது. மூதாட்டி ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
Comments