தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது..!

0 6277
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் சுமார் 3 ஆயிரத்து 888 தேர்வு மையங்களில் 9.38 லட்சம் மாணவ, மாணவிகளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனித் தேர்வர்களும் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுப்பதற்காக 3 ஆயிரத்து 50 பறக்கும் படைகளும், ஆயிரத்து 241 நிலையான கண்காணிப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments