பிளஸ் டூ தேர்வு மையங்களை கண்காணிக்க 4,290 பறக்கும் படைகள் - அமைச்சர்

0 6955

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையங்களை கண்காணிக்க 4,290 பறக்கும் படைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், சார்லஸ் அப்பாதுரை கோப்பைக்கான இறுதி போட்டியை பார்த்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்கள் தேர்வு எழுதும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றார்.

மேலும், ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர தேவையில்லை என்றார்.

தொடர்ந்து சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுக்காப்பு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments