இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 2 இலகு ரக ஹெலிகாப்டர் கடலோரக் காவல்படையில் சேர்ப்பு

0 2039

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 2 இலகுரக ஹெலிகாப்டர்கள் கடலோரக் காவல்படைப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளன.

கடலோரக் காவல் படைக்காக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஏஎல்எச் எம்கே 3 என்கிற இலகு ரக ஹெலிகாப்டரைத் தயாரித்துள்ளது.

கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலோரக் காவல்படைத் தலைவர் பதானியா இந்த ஹெலிகாப்டரைப் பணியில் சேர்த்து வைத்தார்.

மேற்கு கடற்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments