அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து- சாலையோரத்தில் இருந்த வீட்டின் சுவர் மீது மோதி விபத்து

0 2649

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோரத்தில் இருந்த வீட்டின் மதில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.

பம்பாடு வழியாக வண்டூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து, அம்பலப்படி அருகே சாலை வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த வீட்டின் மதில் சுவர் மீது மோதி நின்றது. இதில், பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்த நிலையில் பேருந்தில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

5 பேரும் மீட்கப்பட்டு மலப்புறம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மலப்புறம் போலீசார் பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments