நார்டிக் நாட்டு பிரதமர்களுடன், பிரதமர் மோடி பேச்சு

0 1587

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் பிரதமர் மோடி, நார்டிக் நாடுகளின் பிரதமர்களுடன் தனித்தனியாக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் மூன்று நாள் சுற்றுப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி டென்மார்க்கின் கோபன்கேகனில் இந்திய - நார்டிக் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

முன்னதாக இந்த மாநாட்டுக்கு வந்த சுவீடன் பிரதமர் மெக்தலீனா, ஐஸ்லாந்து பிரதமர் கேத்தரீனா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிடையே இப்போதுள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், பல்துறை ஒத்துழைப்புக் குறித்தும் பேச்சு நடத்தினார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments