விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது- சென்னை உயர் நீதிமன்றம்

0 2555

வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லும் ஆட்களைத் துன்புறுத்தக் கூடாது எனக் காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, குற்ற விசாரணை நடத்தக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

துன்புறுத்தல்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வரும்போது கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒருவரை விசாரணைக்கு அழைக்கும் போது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

ஒருவரை விசாரணைக்கு அழைக்கும் போது, புகார் குறித்த விவரங்களுடன் சம்மன் அனுப்ப வேண்டும் என்றும், விசாரணை விவரங்களைக் காவல் நிலையப் பதிவேட்டில் குறிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments