ரஷ்ய படைகளின் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தில் சிக்கித் தவித்த பூனை - தீயணைப்பு வீரர்கள் மீட்பு

0 1951
ரஷ்ய படைகளின் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தில் சிக்கித் தவித்த பூனை - தீயணைப்பு வீரர்கள் மீட்பு

உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், சேதமடைந்த ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கித் தவித்த பூனையை ஏணி மூலம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கீவ்வின் வடமேற்கே உள்ள போரோடியங்காவில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்நிலையில், அங்குள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் சிக்கித் தவித்த பூனையை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து, அந்த பூனைக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments