உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

0 2566
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வன்முறையால் பாதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ரம்ஜான் தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜோ பைடன், உலகெங்கிலும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு விதமான சவால்களும், சோதனைகளும் நீடிப்பதாக தெரிவித்தார்.

இஸ்லாமியர்களால் அமெரிக்கா நாளுக்கு நாள் வலுப்பெறுவதாக கூறிய அவர், மத நம்பிக்கைகளுக்காக யாரும் ஒடுக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாத மக்களையும் உய்குர், ரோஹிங்கிய இன மக்களையும் இந்நாளில் நினைவு கூருவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments