சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டி மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து

0 2670
சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டி மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டியை எதிரே அதிவேகமாக வந்த கார் தட்டித் தூக்கியெறிந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.

ஜான் திரவியம் என்ற பாதிரியார் ஒருவர் மதுரையில் இருந்து திருவாடானை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். முப்பையூர் விலக்கு பகுதியில் உள்ள மதுரை - தொண்டி சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது முப்பையூர் சந்திப்பு சாலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் குறுக்கே வந்தவர் வேகமாக சாலையை கடக்க முயன்றார்.

இதனை சற்றும் எதிர்பாராத பாதிரியார் உடனடியாக வேகத்தை குறைக்க முடியாமல் நிலைதடுமாறி சென்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியதில், வாகனஓட்டி சேவியர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து தேவகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments