தமிழகத்தில் வருகிற 5-ந் தேதி கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2291
தமிழகத்தில் வருகிற 5-ந் தேதி கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 5-ந் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5-ந் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் பகல் நேர வெப்பநிலை அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என கூறியுள்ள வானிலை மையம், சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments