பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மீது திடீரென கழன்று விழுந்த மின்விசிறி

0 3045
பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மீது திடீரென கழன்று விழுந்த மின்விசிறி

ஆந்திராவில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி மீது மின்விசிறி திடீரென கழன்று விழுந்ததில் அந்த மாணவி காயமடைந்தார்.

சத்யசாய் மாவட்டத்தின், ஹேமாண்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நேற்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவி ஒருவரின் தலைக்கு மேல் சுழன்று கொண்டிருந்த மின்விசிறி, திடீரென்று கழன்று விழுந்தது.

இதில் மாணவியின் கண்ணுக்கு கீழ் மின்விசிறியின் இறக்கை பட்டதில், அவர் லேசான காயமடைந்தார். உடனடியாக ஆசிரியர்கள் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சைக்கு பின்னர் மாணவி மீண்டும் தேர்வெழுதினார்.

மின்விசிறி முறையாக பொருத்தப்படாததால் கழன்று விழுந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து விசாரணை நடைபெறுவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments