இலங்கை மக்களுக்கு உதவிப்பொருட்களை அனுப்ப அனுமதி அளித்ததற்காக, அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் நன்றி

0 2143

லங்கை மக்களுக்கு உதவிப்பொருட்களை அனுப்ப அனுமதி அளித்ததற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசு அனுமதிக்கக் கோரி கடந்த வாரம் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதுடன், அது குறித்து பிரதமர் மோடிக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர், இதுபோன்ற மனிதாபிமான உதவிகள் இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்த உதவும் என குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments