ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்ட தமிழக ராணுவ வீரரின் பையில் கையெறி குண்டு கண்டுபிடிப்பு

0 18680
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்ட தமிழக ராணுவ வீரரின் பையில் கையெறி குண்டு கண்டுபிடிப்பு

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்ட தமிழக ராணுவ வீரரின் பையில் கையெறி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவில் வேலூரை சேர்ந்த பாலாஜி சம்பத் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், டெல்லி வழியாக சென்னை செல்ல ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு இன்று காலை அவர் வந்துள்ளார்.

அப்போது, ராணுவ வீரரின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் பரிசோதித்தபோது, அவரது பையில் கையெறி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, பட்காம் மாவட்டத்தின் ஹம்ஹாமா காவல்துறையிடம் அவர் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கையெறி குண்டு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments