காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீனவருடன் சேர்ந்து காப்பாற்றிய இளைஞர்

0 2867
காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீனவருடன் சேர்ந்து காப்பாற்றிய இளைஞர்

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்த இளைஞர் ஒருவர் மீனவர் உதவியுடன் காப்பாற்றினார்.

கருங்கல்பாளையத்தையும் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தையும் இணைக்கும் காவிரி ஆற்றுப் பாலத்தில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர், தனது பரிசலை பெண் அருகே கொண்டு சென்று காப்பாற்ற முயன்றார். தனி ஆளாக அவரால் காப்பாற்ற முடியாத நிலையில், பாலத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் உடனடியாக ஆற்றுக்குள் குதித்து, பெண்ணைக் காப்பாற்ற உதவி செய்தார்.

காப்பாற்றி கரைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஆவுதி பாளையத்தைச் சேர்ந்த ராதா என்பதும் குடும்பப் பிரச்சனையில் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments