சீனாவில் 6 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப் பணி தீவிரம்
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அங்கு மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சாங்ஷா நகரில் உள்ள 6 மாடி குடியிருப்பு கட்டிடம் கடந்த 29-ஆம் தேதி மதியம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 39 பேர் மாயமான நிலையில், 16 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர் மீட்புப் பணியில், ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்கள் குடியிருப்பின் ஒவ்வொரு அடுக்கிலும் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
சிறிய அளவிலான கருவிகளை பயன்படுத்தி இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை தீயணைப்பு வீரர்கள் வழங்கி வருகின்றனர்.
Comments