ஆட்டோவின் மேற்கூரையில் நடமாடும் தோட்டம் அமைத்த ஓட்டுநர்.!

0 2480

டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் மேற்கூரையில் நடமாடும் தோட்டத்தை உருவாக்கி உள்ளார்.

மேற்கு டெல்லியின் திமார்பூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது ஆட்டோவின் மேற்கூரையில் அலங்கார மூங்கில், ரோஜா உள்ளிட்ட அலங்கார செடிகளும், 25 வகையான காய்கறி செடிகளையும் நட்டு வளர்த்து வருகிறார்.

தனது தேவைக்கு காய்கறிகளை எடுத்துக் கொள்வதாகவும், அதே நேரம் ஆட்டோவில் வரும் பயணிகளை குளிர்ச்சியான சூழலில் வைத்திருக்க முடிவதாகவும் ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். தற்போது குமாரின் இந்த யுக்தி டெல்லிவாசிகளிடையே பிரபலம் அடைந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments