டெல்லியில் அனைத்து வாகனங்களுக்கும் தகுதிச் சான்றிதழ் கட்டாயம்... மீறுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், சிறைத்தண்டனை

0 2238

தலைநகர் டெல்லியில் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் சிறைத்தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி போக்குவரத்துத் துறை விடுத்துள்ள அறிக்கையில், அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களும் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களுக்கும் தகுதிச் சான்று அவசியம் என கூறப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கும் சிறைத்தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments