நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஏப்ரலில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்வு
நாட்டில் இதுவரை இல்லாத அளவாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட ஏப்ரலில் 25 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மத்திய ஜி.எஸ்.டியாக 33 ஆயிரம் கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டியாக சுமார் 41 ஆயிரம் கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
Comments