நிலக்கரி தட்டுப்பாட்டால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

0 3330
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 அலகுகளும், இரண்டாம் பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினசரி 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக முதல் பிரிவில் உள்ள 2,3 மற்றும் 4ஆவது அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு தினசரி 24 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது 7 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments