சீனாவில் பயங்கரம் : அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

0 3693

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், 39 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாங்ஷா நகரில் உள்ள 6 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 39 பேர் மாயமானதாகவும், மேலும் 23 பேர் சிக்கியுள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், இடிபாடுகளிலிருந்து 5 பேர் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments