கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் - ராதாகிருஷ்ணன்

0 3258

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசி செலுத்தவும் முன் வரவேண்டும் என்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் பேட்டியளித்த அவர், இன்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் 12 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் 40 லட்சம் பேர் முதல் தவணை கூட போட்டுக்கொள்ளாமல் உள்ளதாகவும் கூறினார்.

மேலும், 6 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் இருந்து உரிய அறிவிப்பு வரவில்லை என்றும், அதற்காக பள்ளிகள் முழு அளவில் தயாராக உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments