தருமபுரி அருகே தடை செய்யப்பட்ட மருந்துகளை போதை ஊசியாக விற்பனை செய்த இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

0 3543
தருமபுரி அருகே தடை செய்யப்பட்ட மருந்துகளை போதை ஊசியாக விற்பனை செய்த இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தருமபுரி அருகே போதை ஊசிகளை பதுக்கி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அதியமான் கோட்டை பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், மிட்டாதின்னஹள்ளி பகுதியை சேர்ந்த வஜ்ரவேல் என்பவனும் சாமி செட்டிபட்டியை சேர்ந்த முருகேஷ் என்பவனும் தடை செய்யப்பட்ட மருந்துகளை போதை ஊசியாக போட்டு வந்தது தெரியவந்தது.

மருந்துகள் அனைத்தையும் ஓரிடத்தில் பதுக்கி வைத்து பல்வேறு இடங்களில் இளைஞர்களுக்கு விற்பனை செய்து போதைக்கு அடிமையாக்கியதும் அம்பலமானது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஓராண்டுக்கு பிணையில் வெளிவர முடியாத வகையில், வஜ்ரவேல், முருகேஷ் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments