உசிலம்பட்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு.!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி செல்லும் வழியில் உசிலம்பட்டிக்கு சென்ற முதலமைச்சர், தீயணைப்பு நிலையத்தின் பொது நாட்குறிப்பு பதிவேடு, தீ விபத்து மற்றும் பிற விபத்து பதிவேடுகளை பார்வையிட்டார்.
பின்னர், அந்த நிலையத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார்.
இதனை அடுத்து, உசிலம்பட்டி காவலர் குடியிருப்பை ஆய்வு செய்த முதலமைச்சர், அங்கு குடியிருப்போரிடம் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
Comments