அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம்.!
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டில் அங்கீகாரம் பெற்று தந்தது யார்? என்றும் பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
உடல் உறுப்பு தான திட்டத்தில் மகாராஷ்ட்ரா முன்னேறி, தமிழகம் பின்தங்கியதாக பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக அரசால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீட்டில் மருத்துவக்கல்வி கிடைத்தது என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் மாளிகையை திமுக முற்றுகையிட்ட பிறகே மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்ததாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பல கட்ட முயற்சிக்கு பின் தனது கையெழுத்தால் தான் உள் இட ஒதுக்கீடு கிடைத்ததாக கூறினார்.
Comments