திருமண விழாவில் நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம்.. வித்தை காட்டிய நபர் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கைது

0 3927
திருமண விழாவில் நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம்.. வித்தை காட்டிய நபர் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கைது

ஒடிசாவில் திருமண விழாவில் நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம் ஆடி வித்தை காட்டிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த புதன்கிழமை கரண்ஜியா நகரில் நடந்த திருமண நிகழ்வில் நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம் ஆடி 5 பேர் வித்தை காட்டினர். கூடையில் இருந்து வெளியே வரும் பாம்பை கொண்டு வீரர் வித்தை காட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது.

பாம்புபிடி வீரர் குறித்து பொது மக்கள் அளித்த புகாரில் சம்பவம் இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் பாம்பை மீட்டனர். தப்பியோடிய 5 பேரை மடக்கிப் பிடித்த வனத்துறையினர், பாம்பு பிடி வீரரை வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments