எரிவாயு தொழிற்சாலையிலிருந்து திடீரென கசிந்த அமோனியம் வாயு

0 3016

ஹரியானாவில் எரிவாயு தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு கசிந்ததால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது.

மூச்சு திணறல் ஏற்பட்டு 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜஜ்ஜார் பகுதியில் செயல்பட்டு வரும் "Kathha" எரிவாயு தொழிற்சாலையில் இருந்து நேற்றிரவு திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து, தொழிற்சாலைக்கு அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்கும் பரவியது.

வாயு கசிவால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தலைவலி ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் வாயு வெளியேறும் சிலிண்டரின் வால்வை நிறுத்தினர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments