சென்னையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் "இப்தார்" நிகழ்ச்சி

0 3633
சென்னை மயிலாப்பூரில், அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை மயிலாப்பூரில், அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்கள், மத இன வேறுபாடுகளை கடந்து, மத நல்லிணக்கத்துடன், இந்தியாவிற்கே ஒர் உதாரணமாக வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சி நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்திய வரலாற்றில், 25 ஆண்டுகளுக்கு மேலாக இப்தார் நோம்பு நிகழ்ச்சி நடத்தி வரும் ஒரே கட்சி அதிமுக தான் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments