சேலத்தில், பள்ளி மாணவியை கன்னத்தில் அறைந்த புகாரில் நடத்துனர் சஸ்பெண்ட்

0 7500
சேலத்தில், பள்ளி மாணவியை கன்னத்தில் அறைந்த புகாரில் பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சேலத்தில், பள்ளி மாணவியை கன்னத்தில் அறைந்த புகாரில் பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதன்கிழமை மாலை, அழகாபுரத்தில், பள்ளி மாணவிகள் சிலர் பள்ளி முடித்து வீடு திரும்புவதற்காக அரசு பேருந்தில் பயணித்துள்ளனர்.

அப்போது, நடத்துனர் மகாலிங்கம் மாணவிகளை உள்ளே செல்லுமாறு திட்டியதாகவும், ஒரு மாணவியை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வரும் போலீசார், குற்றம் நிருபிக்கப்பட்டால் நடத்துனர் மீது போக்சோ சட்டம் பாயும் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, போக்குவரத்து துறை அதிகாரிகள் புகாருக்கு உள்ளான நடத்துனரை பணியிடை நீக்கம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments