எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.53 லட்சம் பணம் பறிமுதல்

0 3045
ஆவணங்களின்றி ரயிலில் கொண்டு வரப்பட்ட 53 லட்ச ரூபாயை, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆவணங்களின்றி ரயிலில் கொண்டு வரப்பட்ட 53 லட்ச ரூபாயை, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த நபரின் உடமைகளை சோதனையிட்டபோது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து நடந்த விசாரணையில், அவர் ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்தவர் என்றும் அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்றும் தெரியவந்தது.

தான் நகை வியாபாரியிடம் பணியாற்றுவதாகவும், நகை விற்ற பணத்தை கொண்டு வந்தததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments