சாலையின் குறுக்கே நின்ற கார் மீது இரு சக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து.. காரை பின்னோக்கி நகர்த்திய ஓட்டுநர் அலட்சியமாக சாலையின் குறுக்கே நிறுத்தியதால் விபரீதம்..

0 3573
கடலூரில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர், சாலையோர கடையில் இருந்து பின்னோக்கி எடுத்து சாலையின் குறுக்கே நின்ற காரின் மீது மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன.

கடலூரில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர், சாலையோர கடையில் இருந்து பின்னோக்கி எடுத்து சாலையின் குறுக்கே நின்ற காரின் மீது மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன.

சேத்தியாதோப்பு கூட்ரோடு பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் இருந்து காரை பின்னோக்கி நகர்த்திய கார் ஓட்டுநர், உடனடியாக முன்னோக்கி நகர்த்தாமல் பரபரப்பான சாலையில் அலட்சியமாக நபர் ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பது அக்காட்சியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் பின் பகுதியில் மோதி சாலையில் பல மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments