பள்ளி மாணவியை அரசு பேருந்து நடத்துனர் கன்னத்தில் அறைந்ததாகப் புகார்!

0 3661

சேலத்தில், பிளஸ் 2 படிக்கும் மாணவியை அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அழகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாலை பள்ளி முடிந்ததும் 5C தடத்தில், கன்னங்குறிச்சி செல்லும் அரசு பேருந்தில் ஏறி உள்ளனர்.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், பள்ளி மாணவி ஒருவரை நடத்துனர் உள்ளே செல்லுமாறு திட்டியதுடன், கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய சக மாணவிகளையும் நடத்துனர் திட்டியதால், அடுத்த பேருந்து நிறுத்தத்தில் அவர்கள் கீழே இறங்கி, பெற்றோரை வரவழைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நடத்துனரிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments