ஏர் ஏசியா விமான நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஏர் இந்தியா முடிவு.!

0 2808

ஏர் ஏசியா விமான நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த முடிவு செய்துள்ள டாடா குழுமத்தின் ஏர் இந்திய நிறுவனம், ஒப்புதல் வழங்கக் கூறி இந்திய போட்டி ஆணையமான சி.சி.ஐ.யிடம் விண்ணப்பித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் 83.67 சதவீத பங்குகளை டாடா குழுமம் வைத்திருக்கும் நிலையில், மீதமுள்ள பங்குகள் மலேசியாவின் ஏர் ஏசியா இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திடன் இருக்கிறது.

இந்த நிலையில், மீதமுள்ள பங்குகளுக்கான தொகையையும் செலுத்தி ஏர் ஏசியா விமான நிறுவனத்தை முழுமையாக டாடா குழுமம் வாங்கவுள்ளது.

இந்திய போட்டி ஆணையத்தில் டாடா குழுமம் தாக்கல் செய்த மனுவில், தங்களால் மறைமுகமாக நிர்வகிக்கப்படும் ஏர் ஏசியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் கையகப்படுத்தி ஏர் இந்தியா என்ற பெயரிலேயே நடத்த முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments