சென்னை அயோத்தியா மண்டபம் - அறநிலையத்துறை கையகப்படுத்தியது ரத்து..!
சென்னை அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராம் சமாஜ் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதிகள் முனீஸ்வர்நாத் பண்டாரி, பரதச் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஸ்ரீராம் சமாஜ் அமைப்பு மீது குற்றம்சாட்டி அரசு அனுப்பிய நோட்டீஸில் எந்தவித விவரங்களும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்ததவை ரத்து செய்வதாக அறிவித்த நீதிபதிகள், அதை உறுதிப்படுத்திய தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்வதா அறிவித்தனர்.
அறநிலையத்துறை புதிதாக விசாரணையை தொடங்கி, அனைத்து தரப்பு விளக்கத்தையும் கேட்ட பின்னர் சட்டத்திற்குட்பட்டு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
Comments