மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் நகர்ப்புற பகுதிகள் அதிகமாக இருக்கிறது - அமைச்சர் கே.என்.நேரு

0 2397

ற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் நகர்ப்புற பகுதிகள் அதிகமாக இருப்பதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தருமபுரி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா என எம்.எல்.ஏ. ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் 45.38 சதவீதமாக இருந்த நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கை தற்போது 53 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார்.

நகர்ப்புறங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன், பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும்,  அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments