ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டுகள் தயாரித்த 6 பேர் கொண்ட கும்பல் கைது

0 2866
ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டுகள் தயாரித்த 6 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை மணலி புதுநகரில், கள்ள நோட்டு தயாரிக்கும் கும்பலிடம் நடத்திய விசாரணையில், ஆட்டோவின் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 30 லட்சம் ரூபாய்க்கான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 12ஆம் தேதி மணலிபுதுநகர், ஆஞ்சேயர் கோவில் பின்புறம் உள்ள வீடு ஒன்றில் கலர் பிரிண்டர் எந்திரங்கள் மூலம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டுகள் தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

அவர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரித்த போது, ஆட்டோ ஒன்றின் சீட்டுக்கு அடியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments