புகார் கூறப்பட்டவரின் பெயரை நீக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பு ஆய்வாளர் கைது

0 4214
புகார் கூறப்பட்டவரின் பெயரை நீக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பு ஆய்வாளர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் புகார் கூறப்பட்டவரின் பெயரை நீக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சார்பு ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

ராமசாமிபட்டியைச் சேர்ந்த தங்கமணியின் நண்பர் சோலை என்பவரின் இடத்தில் தங்கராஜ் பாண்டியன் என்பவர் கல் நட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கல்லை தங்கமணி, சோலை உள்ளிட்ட சிலர் உடைத்ததாக எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இந்தப் புகாரில் இருந்து தனது பெயரை நீக்க, சார்பு ஆய்வாளர் ராமநாதன் ஏற்கனவே 30 ஆயிரம் ரூபாய் வாங்கியதாகவும், கூடுதலாக 10 ஆயிரம் பணம் கேட்பதாகவும் தங்கமணி விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து 10 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது, சார்பு ஆய்வாளர் ராமநாதனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments