பூனை என நினைத்து சிறுத்தை குட்டியை தூக்கிய தொழிலாளர்கள்.!

0 4357

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் இருந்த சிறுத்தை குட்டி மீட்கப்பட்டது.

பொலம்பட்டி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிக்கு சென்ற போது, அங்கு பிறந்து ஒரு மாதமே ஆன சிறுத்தை குட்டி இருந்துள்ளது.

அதனை பூனை என நினைத்து முதலில் தூக்கிய தொழிலாளர்கள், சிறுத்தை குட்டி என தெரிந்த பின் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments