ஆம்பூரில் புதிதாக வாங்கிய ஓலா ஸ்கூட்டர் அடிக்கடி பழுதாவதாக கூறி மருத்துவர் ஒருவர் ஆத்திரத்தில் அதற்கு தீ வைத்து எரிப்பு.!

0 4777

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், புதிதாக வாங்கிய ஓலா ஸ்கூட்டர் அடிக்கடி பழுதாவதாக கூறி பிசியோதெரபி மருத்துவர் ஒருவர், ஆத்திரத்தில் அதற்கு தீ வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆம்பூர் பகுதியை சேர்ந்த பிசியோதெரபி மருத்துவரான பிரித்திவிராஜ் என்பவர் ஓலா புரோ எஸ் ரக மின் ஸ்கூட்டரை ஜனவரியில் வாங்கியுள்ளார். அதன்பின் 3 முறைக்கு மேல் பழுதாகியதோடு, வாகனத்தை பதிவு செய்து தர அவர் தொடர்ந்து நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குடியாத்தம் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்வதாக ஓலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு சார்ஜ் போட்டு வாகனத்தை அவர் கொண்டு சென்று ஆம்பூர் திரும்பும் வழியில் பேட்டரி தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி சேவை மையத்தை அவர் தொடர்பு கொண்ட போது உரிய பதில் வராததாக சொல்லப்படும் நிலையில், ஆத்திரத்தில் ஸ்கூட்டரை சாலை ஓரத்தில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி கொழுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments