வண்ண விளக்குகளுடன் இனி ஜொலிக்க இருக்கிறது ரிப்பன் மாளிகை.. வண்ண விளக்கு அமைக்கும் பணி நிறைவு பெற்றதையடுத்து சோதனை

0 3202
வண்ண விளக்குகளுடன் இனி ஜொலிக்க இருக்கிறது ரிப்பன் மாளிகை.. வண்ண விளக்கு அமைக்கும் பணி நிறைவு பெற்றதையடுத்து சோதனை

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகையில் 1 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர வண்ண விளக்குகள் அமைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து சோதனை செய்து பார்க்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வரும் ரிப்பன் மாளிகை வழக்கமாக குடியரசு தினம், சுதந்திர தின நாட்களில் மட்டும் தான் மூவர்ண ஒளிவிளக்குளால் ஒளிரவிடப்படும்.

சில முக்கிய நாட்களில் மட்டும் தனியார் அமைப்புகள் சார்பில் வண்ண விளக்குகள் பொருத்தப்படும். இந்நிலையில் மாநகராட்சியின் திட்டத்தின் படி, தற்போது நிரந்தர ஒளிவிளக்குகள் நிறுவப்பட்டுள்ள நிலையில் இனி தினமும் இரவில் ரிப்பன் மாளிகை வண்ணமயமாக ஒளிர உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments