சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி 6 மாத ஆண் குழந்தை உட்பட இருவர் பலி

0 7565
சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி 6 மாத ஆண் குழந்தை உட்பட இருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 மாத குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மதுரையை சேர்ந்த அஸ்வின்குமார், சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபின் குடும்பத்துடன் மதுரை நோக்கி புறப்பட்டார். அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புக்கதுறை கூட்டு சாலை அருகே பார்க்கிங் அல்லாத பகுதியில் டேங்கர் லாரி ஒன்று சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலையில் தூக்கக்கலக்கத்தில் அஸ்வின்குமார் காரை, டேங்கர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

அதில், காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் அஸ்வின்குமாரும் அவரது 6 மாத குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவரது மனைவியும், 2வயது மகளும் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments