அதிகாரிகள் மீது மோதுவது போல் வந்த காரை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு...சம்பவ இடத்திலேயே இருவர் பலி.!

0 2840

பிரான்ஸில், போலீஸ் அதிகாரிகள் மீது மோதுவது போல் வந்த காரை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் பாரிஸில் உள்ள பழமை வாய்ந்த போனாஃப் பாலத்தின் மீது, வோல்க்ஸ்வேகன் போலோ கார் ஒன்று ராங் சைட்டில் போலீசாரை நோக்கி வேகமாக வந்துள்ளது.

தற்காப்பிற்காக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது தொகுதியில் வெற்றி பெற்றதை ஆதரவாளர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வந்த நிலையில், அங்கிருந்து ஒன்னேகால் மைல் தொலைவில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments