கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

0 3802
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மற்றும் நடைகள் குறைக்கப்பட்ட பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் வரை நகர பேருந்துகள் இயக்க வேண்டும் என எம்.எல்.ஏ. ஈஸ்வரன் சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், அவ்வாறு பேருந்துகள் இயக்க மோட்டார் வாகன விதிகளில் வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.

மேலும், மினி பேருந்துகளை பேருந்து நிலையத்திற்குள் அனுமதிப்பது குறித்து, அந்தந்த பேருந்து உரிமையாளர்களிடம் கோரிக்கை பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments